Friday, February 26, 2010

அமீர்கான் இயக்கி தயாரித்த தாரே ஜாமீன் பர் படம் இந்தி திரையுலகம் முழுவதும் கைதட்டல் வாங்கியது. இதனையடுத்து, இந்த படத்தினை தமிழ் டப் செய்ய அமீர்கான் விரும்பினார். தமிழ் மொழி படங்களை அதிகமாக விரும்பி வரும் அமீர்கான், சூர்யா நடித்த கஜினி படத்தை இந்தியில் கதாநாயகனாக நடித்து வசூல் சாதனை புரிந்தார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமீர், கஜினி படத்தில் சூர்யாவின் நடிப்பு அளவிற்கு தான் நடிக்கவில்லை என்றும், ஆனால் படத்தில் அவரது நடிப்பை கெடுக்காமல் நான் பார்த்துக் கொண்டேன் என்றும் பெருந்தன்மையாக கூறினார். இதனையடுத்து, அமீர்கானின் தாரே ஜாமீன் பர் தமிழில் டப் செய்யப்பட்டது. தமிழில் டப் செய்த இந்த படத்திற்கு, அமீர்கானுக்காக, சூர்யா டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் ரக்த சரித்ரா படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் ப்ரியாமணி. சமூகத்தில் நடக்கும் அதிரடியான பல்வேறு நிஜ சம்பவங்களை படமாக்குவதில் கைதேர்ந்த ராம்கோபால் வர்மா தற்போது, ஆந்திராவில் கடப்பா பகுதியில் நடக்கும் அரசியல்-ரவுடியிசத்தை ரக்த சரித்ராவில் அம்பலமாக்க திட்டமிட்டுள்ளார். கடப்பா கொம்பன்களாக இருந்து பின்னாளில் அரசியல்வாதிகளாகி விட்ட பரிதாள ரவி மற்றும் மத்தெலசெரு சூரி ஆகியோர் இப்படத்தின் முக்கிய நாயகர்கள். இதில் பரிதாள ரவி வேடத்துக்கு விவேக் ஓபராயும், சூரி வேடத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளனர். சூரியின் மனைவி பானுமதி வேடத்தில் ப்ரியா மணி நடிக்கிறார். ஏற்கனவே தேசிய விருது பெற்ற ப்ரியாமணி தொடர்ந்து மணிரத்னம், ராம்கோபால் வர்மா போன்ற ஜாம்பாவான் இயக்குனர்கள் படங்களாக நடித்து வருவது மற்ற நடிகைகள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரியாமணிக்கு, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி தெரியாமலா இருக்கும்!


Thursday, February 25, 2010

தெலுங்கு பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவை போதை பொருட்கள் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் போதை பொருளை கடத்தி விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். வேறு சில நடிகர்களுக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். தருண் பழைய நடிகை ரோஜாரமணியின் மகன். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18, காதல் சுகமானது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலித்து கைவிட்டதாகவும், இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.


ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குனர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு தேர்வு செய்யப்பட்டது. படப்பிடிப்புக்கு போலீஸ் அனுமதி கேட்டனர். மனுவை ஆய்வு செய்த டெல்லி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க தடை போட்டதாக கூறப்படுகிறது. டெல்லிக்கு பயணமாக தயாராக இருந்த ரஜினி, ஐஸ்வர்யாராய்க்கு கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பயணத்தை ரத்து செய்து விட்டனர். இதனை ரஜினியே முன்பு முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்தது நினைவிருக்கலாம். டெல்லிக்கு பதில் வேறு எங்கு படப்பிடிப்பை நடத்தலாம் என்று ஆலோசித்த ஷங்கர், சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்திலேயே சம்பந்தப்பட்ட காட்சியை நேற்று படமாக்கினார். ஐஸ்வர்யா ராயை தூக்கிட்டுப் போய் ரஜினி தாலி கட்டுவது போலவும், போலீசார் ரஜினியை கைது செய்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர்.


யாவரும் கேளிர் படத்தில் கமல்ஹாசனுடன் மாதவன் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து அன்பே சிவம் என்ற படத்தில் நடித்திருந்தனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கும் படம் யாவரும் கேளிர். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். முழு நீள நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகிறது. ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தியில் தீன் பத்தி, தனு வெட்ஸ் மனு, சன்கிளாஸ் படங்களில் மாதவன் நடித்து வருகிறார். குரு என் ஆளு படத்துக்கு பின் தமிழில் அவர் நடிக்கும் படமிது.




நடிகை சோனியா அகர்வால் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட சிலபடங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக இருந்து வந்த சோனியா - செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆன்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது செல்வராகவனை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வரும் சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் உலவ விட்டார். சோனியாவின் இந்த வாய்ப்பு வேட்டையில் சிக்கியிருக்கிறது ஒரு மலையாள பட வாய்ப்பு. ஆமாங்க! மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க சோனியா அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் நாயகனாக சுரேஷ்கோபி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.எஸ்.சுரேஷ் பாபு இயக்குகிறார்.

சுறா


விஜய்யின், 50-வது படம் "சுறா". இந்த படத்தை, சங்கிலி முருகன் தயாரிக்கிறார். இவர், ஏற்கெனவே விஜய் நடித்த "காதலுக்கு மரியாதை" படத்தை தயாரித்தவர். எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். இவர், "பொன்மனம்", "என் புருஷன் குழந்தை மாதிரி", "கார்மேகம்" (மலையாளம்) ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஆர்.கே., பானு நடித்த "அழகர் மலை" என்ற படத்தை இயக்கியுள்ளார் எஸ்.பி.ராஜ்குமார். விஜய் இதில் மீனவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களோடு வடிவேலு, பசுபதி, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த "மஹாதீரா" படத்தின் வில்லன் தேவ் கில், இந்தப்படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் கதைக்களம் என்பதால் கேரளாவை படப்பிடிப்புத் தளமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பாக தூத்துக்குடியில் அறுபது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஆக்ஷன் படமான இதில், சண்டைக் காட்சிகளில் விஜய் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையிலும் விஜய் கலக்கியுள்ளார். சமீபத்தில் பாண்டிச்சேரி அருகே இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதுவரை இல்லாத அளவு, விஜய் படங்களிலேயே அதிக பிரம்மாண்டமாக "சுறா" தயாரிக்கப்பட்டு வருகிறது. பாடல்கள்: வாலி, இசை: மணிசர்மா, ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, ஏகாம்பரம். எடிட்டிங்: அந்தோணி, கலை: முருகன், சண்டை: கனல் கண்ணன், வசனம்: எஸ்.பி.ராஜ்குமார். சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ள "சுறா" கோடை விருந்தாக ஏப்ரல் 14ல் வெளியாகிறது.

Wednesday, February 24, 2010




Print



Former and present Pakistani players today paid rich dividends to Sachin Tendulkar for becoming the first bastman in the history of the game to score a double hundered in one-dayers and said he is the perfect "role model" for any cricketer.

"For any cricketer he is the perfect role model. The great thing about him is that he has been outstanding in both Tests and ODIs. As a Pakistani player, I know how much value we have always put on his wicket," right-handed batsman Shoaib Malik said about the batting maestro.

Former skipper and wicketkeeper Rashid Latif said the feat was no surprise to him as it was only a matter of time for Tendulkar to achieve it.

"I always expected him to be the first one to score 200 in ODIs, but I was surprised that he took so long," Latif said.

Another former captain Aamir Sohail said, "The rule is simple when you give respect to the game, then only the game will give you respect."

Batting great Javed Miandad said he had always asked Pakistani cricketers to admire Tendulkar for his down to earth attitude, hard work and passion.

"Records are there to be broken but it makes you happy when someone like Tendulkar does it. I think he thoroughly deserves this record and many more in days to come," he said.




Print



Sachin Tendulkar today created history by becoming the first cricketer to score a double century in one-day internationals with a breath-taking unbeaten 200 to steer India to a massive 401 for three against South Africa in the second cricket ODI at Gwalior.

Tendulkar played an incredible and heart-stopping knock which came off just 147 balls, treating the capacity crowd at
the Captain Roop Singh stadium to a stunning exhibition of strokeplay.

It was not only Tendulkar's 46th ODI century but it also marked the highest score in one-dayers, eclipsing the
previous record of 194 which was was held by Pakistan's Saeed Anwar and Zimbabwe's Charles Conventry.

The little master was on fire and the South African bowlers bore the brunt as they were literally made to bleed runs at the short ground. His sublime unbeaten 200 came off just 147 balls and was bejewelled with 25 fours and three sixes.

Along with the classic Mumbai batsman, Charl Langvedt went into the history books as Tendulkar achieved the amazing milestone off his bowling.

Tendulkar steered Langveldt to the off side to get to the magical figure and the packed stadium went into a frenzy.
Dinesh Karthik (79), captain Mahendra Singh Dhoni (68 not out) and Yusuf Pathan (36) were the other notable performers in India's mammoth total, leaving the Proteas to score at a stiff asking rate of just over eight runs per over.


பொய் படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன். பிறகு ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியது: அறிமுகமான தமிழில் அதிக வாய்ப்பில்லை என்றாலும் தெலுங்கு, மலையாள உலகம் எனக்கு கைகொடுத்தது. சுஹா சன்ராய் இயக்கும் டேம் 999 என்ற ஆங்கில படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு ஆங்கில கதாநாயகனும், கதாநாயகியும் நடிக்கிறார்கள். மும்பை, கேரளா, ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் படம் இது. மார்ச் முதல் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுதவிர தெலுங்கில் ஜெகபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஸ்ரீகாந்துடன் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். கன்னடத்தில் ஆப்தரக்ஷகாவில் நல்ல வேடம். இந்த ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது என்று கூறினார் விமலா ராமன்.


டூ-பீஸ், முத்தக் காட்சி எதிலும் நடிக்கத் தயார் என ஒரு மார்க்கமாகத்தான் பேட்டியளித்திருந்தார் பியா. இந்த ஓவர் துணிச்சலுக்கு யாரும் செவி சாய்த்ததாக தெரியவில்லை. காரணம் புதுப்படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை பியா. கவலையில் இருந்தவருக்கு அடித்திருக்கிறது மிகப்பெரிய வாய்ப்பு. கே.வி.ஆனந்த் இயக்கும் கோ படத்தில் பியா 2வது கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். கோ படத்தில் முதலில் தமன்னா, சிம்பு நடிப்பதாக இருந்தனர். பிறகு தமன்னாவை நீக்கிவிட்டு ராதா மகள் கார்த்திகாவை ஒப்பந்தம் செய்தனர். பிறகு சிம்புவும் நீக்கப்பட்டு ஜீவா சேர்க்கப்பட்டார். பத்திரிகை போட்டோகிராபராக ஜீவா நடிக்கிறார். அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. அஞ்சாதே அஜ்மல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பியா நடிக்கிறார். படப்பிடிப்பிற்காக சீனாவுக்கு செல்ல ஜீவாவுக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த படக்குழு யோசித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


ஆர்.பி. சௌத்திரி தயாரிப்பில் அவர் மகன் ஜீவா நடிப்பதாக இருந்த ரவுத்திரம் படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள், கோ படத்திலிருந்து சிம்பு விலகிவிட, அந்த ரோலில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகிவிட்டார். கடந்த வாரம் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சீனா போகவிருந்த ஜீவா, விசா கிடைக்காததால் சென்னையில் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சொந்தப் படமான ரவுத்திரத்தை தற்காலிகமாகக் கைவிடுமாறு தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டாராம். எனவே இப்போதைக்கு இந்தப் படம் செய்யும் திட்டமில்லை என்று ஆர்.பி. சௌத்ரி கூறிவிட்டதாக சூப்பர்குட் வட்டாரம் தெரிவிக்கிறது. விஷயம் கேள்விப்பட்ட ஸ்ரேயா, ரவுத்திரம் படத்துக்கு கொடுத்திருந்த தேதியை அப்படியே மலையாளப் படமான போக்கிரி ராஜாவுக்கு மாற்றிவிட்டாராம். ஜீவா கதாநாயகனாக நடித்த இன்னொரு படம் கச்சேரி ஆரம்பம் விரைவில் வெளியாக இருக்கிறது.


கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தன்னை மிரட்டி பல விழாவிற்கு வரவழைப்பதாக அஜித்குமார் தெரிவித்தார். இதனையடுத்து, அஜித்திற்கு சினிமா சார்ந்து உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், திரையுலகில் சமரசம் காண அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இன்று பிலிம்சேம்பரில் சமரசக் கூட்டம் நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன். உண்மையற்ற பேச்சுக்காக அஜித் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகளின் கூட்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அஜித்துக்கு ஆதரவு அளித்ததற்காக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஜித் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது. அதன் அடிப்படையில் ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் அஜித் பிரச்சினை குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நஞ்சுபுரம் என்ற படத்தில் ராகவ் ஜோடியாக நடித்திருக்கிறார் மோனிகா. பாம்புகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சார்லஸ் இயக்கி உள்ளார். படத்தில் பாம்புடன் நடித்த அனுபவம் பற்றி கதை கதையாக சொல்கிறார் மோனிகா. பாம்பு என்றால் ரொம்பவே பயம். கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குற பாம்பையே தள்ளி நின்னுதான் பார்ப்பேன். நஞ்சுபுரத்துல பாம்போடு நடிக்க வேண்டி வந்துச்சு. ஆரம்பத்துல பயந்து, பயந்து நடிச்சேன். அப்புறம் அதை தொட்டு தடவி பிரெண்டாக்கிட்டேன். செல்ல பெயர்கூட வச்சேன் என பாம்பு புராணம் பாடுகிறார் மோனிகா. படத்தின் நாயகன் ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்த ராகவ், அதற்கு பிறகு இந்த படத்தில்தான் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கிறார் ராகவ். கிராமத்து கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம். இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நூற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம் என்றார் இயக்குனர் சார்லஸ்


நாளை கண்ணபிரான் படத்திற்கு பிரம்மாண்டமாக துவக்க விழா நடத்தப்போகிறார் அமீர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் திமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆவார். இந்த படத்தை இயக்குகிற அதே நேரத்தில் வேறு படங்களில் கதாநாயகனாக நடிக்கலாமே? இப்படி வந்த அழைப்புகளுக்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார் அமீர். இப்படி அவர் மறுத்த படங்களில் ஒன்று கிடா. இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிற படம் இது. பரத் நடித்த கூடல் நகர் படத்தின் இயக்குனர் இவர். ஆரம்பத்தில் அமீருக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருந்தாராம். ஆனால் கண்ணபிரான் துவக்கம், இன்னபிற இழுபறிகள் ஆகியவற்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் அமீர். இப்போது அமீருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்கப் போகிறவர் நாடோடிகள் பரணி. செவிடராக வந்து கலக்கியிருப்பாரே, அவரேதான்! முதலில் இந்த கதையில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட ஆண்ட்ரியா, அமீர் கதாநாயகன் என்பதால் சரி என்றார். இப்போது கதாநாயகனை மாற்றிவிட்ட நிலையில் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு அடுத்தடுத்த வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார் சீனு ராமசாமி


இயக்குனர் ஹரி தான் இயக்கும் அடுத்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்! தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் என்ற ஆக்ஷன் படம் எடுத்து வருகிறார் ஹரி. இந்தப் படம் முடிந்ததும் விஜயா கம்பைன்ஸூக்காக ஒரு படம் இயக்குவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டப்பட்டுள்ளதாம். அதன்படி அந்தப் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையான இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தனது எல்லா படங்களிலும் அருவாளை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்ட ஹரி, இந்தப் படத்துக்கு அருவா என்றே பெயரிட்டிருக்கிறார். கதையும் வழக்கம் போல திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில்தான் என்பது சொல்லாமலே தெரியும் செய்தி. தனுஷ் இப்போது ஆடுகளம் மற்றும் மாப்பிள்ளை படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடுகளம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மாப்பிள்ளை முடியும் சமயத்தில் அருவா படத்தை ஆரம்பிப்பார்களாம். அருவா படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது


விளம்பரத்திற்காகத்தான் பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையில் வருகிறேன் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். திரையில் அவ்வளாக கவர்ச்சி காட்டாத நடிகை பத்மப்ரியா பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளிலேயே வலம் வருவார். அந்த விழாவுக்கு வரும் ஒட்டுமொத்த ஆண்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அவரின் கவர்ச்சி இருக்கும். இதுபற்றி அவரிடம் கேட்டால், கவர்ச்சி உடை அணிவது என்னோட கொள்கை. அதனால பொது நிகழ்ச்சிகளுக்கு அப்படி வர்றேன். தமிழ்ப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மலையாளப் படங்களில் கவர்ச்சியாக நடிச்சிருக்கேன். பெரும்பாலும் பட விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சி உடையில் வருவேன். அந்த பட பிரமோஷனுக்கு எனது கவர்ச்சி உடை பயன்படும் என்பதால் அப்படி கலந்து கொள்கிறேன். சில கம்பெனிகள் விளம்பரத்திற்காக குறிப்பிட்ட உடையை அணிந்து வர வேண்டும் என்று கூறுவதால் மறுக்காமல் அவ்வுடைகளை அணிந்து பங்கேற்கிறேன், என்கிறார்


கமல்ஹாசன், திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று உலக நாயகன் கமல் ஒரு தொடரும் சரித்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், மற்றும் வெங்கடேஷ் என இந்திய திரையுலகமே கலந்து கொண்டது, நிகழ்ச்சியில் பலர் கமல்ஹாசனின் நடிப்புத்திறமையை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தில் நானும், கமல்ஹாசனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளதாகவும், அப்போது பல நேரங்களில் கமலின் நடிப்பைப் பார்த்து தான் வியந்துள்ளதாகவும், அவரிடமிருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய ரஜினி கலைத்தாய் கமலை மட்டும் கையில் சுமந்தாள், எங்களை தவிர, கலைத்தாயிடம் என் தாயே இது நியாயமா?, கமலை மட்டும் கையில் சுமக்கிறாயே என நான் கேட்டேன், அதற்கு அந்த கலைத்தாய், நீ ஒரு ஜென்மம் மட்டும் நடிகராக வந்திருக்கிறாய், கமல் ஒரு ஜென்மத்தில் நடன இயக்குனராகவும், ஒரு ஜென்மத்தில் இயக்குனராகவும், ஒரு ஜென்மத்தில் நடிகராகவும் என பல ஜென்மங்களை எடுத்து வரும் கமலை சுமப்பது தப்பா? என கேட்டாள். அதற்கு நான் இல்லை தாயே நீ சொன்னது சரிதான். என ரஜினிகாந்த் தன்னை தாழ்த்தி கொண்டு பேசினார். இந்நிலையில் அன்று பேசியதை போல் ஒவியம் ஒன்றை கமலுக்கு ரஜினி பரிசாக தந்துள்ளார். அதில் கலைத்தாய் கமலை மட்டும் சுமப்பது போலவும், ரஜினி, மம்முட்டி போன்றவர்கள் கலைத்தாய் அருகே ஓடி வருவது போலவும் ஒவியத்தில் உள்ளது. இந்திய திரையுலகில் நட்பின் சிகரமாக இருக்கும் ரஜினி-கமலுக்கு இந்த ஒவியம் மேலும் மெருகூட்டுகிறது

Monday, February 22, 2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'படிக்காதவன்' படத்தின் வெற்றிக்குக் காரணமான 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்; உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி' பாடல் காட்சிதான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக இருக்கும்.

இருந்தும் ரஜினி இப்போதும் அதே பாடலை மறுபடியும் ஹம்மிங் கொடுத்துக் கொண்டேயிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். என்றைக்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்தவராகக் காட்சியளிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.


எதற்கெடுத்தாலும் 'தமிழ்', 'தமிழ்' என்று தமிழை கொத்துபுரோட்டா போடும் சில அரசியல் வியாபாரிகளின் கூச்சல், தமிழ்த் திரையுலகில் மறுபடியும் சப்தமில்லாமல் தலையெடுத்துவிட்டது. இந்த முறையும் இவர்கள் வாய்க்கு ஊறுகாய் ரஜினிதான். கூடவே துணைக்கு அஜீத்தையும் இழுத்து வைத்திருக்கிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு விழா என்றால் பேச்சாளர்களைத் தவிர்த்து மற்றவர்களை முறைப்படி அழைக்கலாம். "கண்டிப்பாக வரணும்" என்று சொல்வதோடு முடித்துவிடுவது நாகரிகம்.. "வரலைன்னா சொத்துல பங்கு கிடையாது.. உன்கூட 'கா.." என்று நட்பு ரீதியாகவும், உறவு முறையிலும் அன்போடு மிரட்டுவதும் ஒரு வகையில் நடப்பதுதான்.

ஆனால், "வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது" என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்.

வராவிட்டால் திரையுலகில் நீடிக்கத் தடை.. பணி புரிய முடியாது என்றெல்லாம் மிரட்டி அழைக்கப்பட்டிருப்பதால், வந்தவர்கள் எல்லாம் மனதார வாழ்த்தினார்கள் என்றா கருத முடியும்..? இதுவே கேவலமில்லையா..? ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து "என்னை நாலு வார்த்தை 'நச்சு'ன்னு வாழ்த்திட்டுப் போடா பேமானி.." என்று மிரட்டி அவர் பயத்தில் எட்டு வார்த்தையில் கவிதை பாடிவிட்டுப் போனால் அதைக் கேட்டும் ஒருவர் நெக்குருகி போய் நிற்கிறாரென்றால் அவர் நிச்சயம் 'நட்டு கழன்ற கேஸாகத்தான்' இருக்க முடியும்.

இப்படியொரு தோற்றத்தை வலுக்கட்டாயமாக முதல்வருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்.

"ரஜினி, கமல் இருவரும் வராவிட்டால் கூட்டம் வராது.. குத்துப் பாட்டு நடனங்கள், கேளிக்கைகள், கிண்டல்கள், குத்தல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இல்லையெனில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது.. சின்ன ஸ்பான்ஸர் கிடைத்தால் பணம் பெயராது.. பணம் வரவே இல்லையெனில் இவருக்கு பாராட்டு விழா நடத்துவதால் எங்க டிவிக்கு என்ன பிரயோசஜனம்..?" என்று கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போட்டுக் கொடுத்த திட்டப்படிதான் அத்தனையும் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக கமலஹாசன் முதல்வரை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்தார். கமலஹாசன் வரப் போவதை முன்கூட்டியே பெப்ஸியின் தலைவருக்கு பாஸ் செய்த டிவிக்காரர்கள் "கமல்ஹாசனையும் கலைநிகழ்ச்சியில் ஏதாவது ஒண்ணு செய்ய வைச்சிருங்க.. கமல், சி.எம்.கிட்ட பேசும்போது நீங்களும்கூட இருந்து பேசி முடிச்சிட்டீங்கன்னா கமல் தட்ட மாட்டார்" என்று ஒரு புது திரைக்கதை எழுதி சொல்லியனுப்பினார்களாம்.

தான் மட்டுமே பேச வந்து பெப்ஸியின் தலைவரே இந்த வீட்டில் வரவேற்கிறாரே என்கிற புதுமையில் சபையில் புகுந்த கமலுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் குகநாதன், "ஐயா நீங்களே இவர்கிட்ட சொல்லிருங்க.. ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை மட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசுற மாதிரி இருந்தால் போதும்.." என்று கலைஞரிடம் போட்டுக் கொடுக்க.. 'தேவர் மகன்' புரியாமல் பார்த்தபடியிருக்க.. "நான் சொல்லிக்கிறேன்.. தம்பி நடிப்பாரு.." என்று கலைஞரும் 'தானா வந்து மாட்டுறாங்க பாருங்க..' என்ற நினைப்பில் சொல்லிவிட அன்றைக்கே பத்திரிகைகளில் செய்தி வந்து பரபரப்பூட்டியது கலைஞரின் வசனத்தை கமல் மேடையில் பேசி நடிக்கப் போகிறார் என்று..

தான் பேச வந்த விஷயத்தைவிட தன்னை சிக்க வைத்த காரண, காரியத்தால் சங்கடமாகிப் போன கமல், பிற்பாடு கலைஞர் டிவியில் இருந்து வந்த தொடர் நெருக்கடி கண்டு கடுப்பாகித்தான் போயிருக்கிறார். கடைசிநாள் வரையிலும் தன்னுடைய நிகழ்ச்சிக்கான நேரம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே டபாய்த்துவிட்டு முதல் நாள்தான், "ஸ்டெடி பண்ண நேரமில்லை. பிராக்டீஸும் முடியலை.. சொதப்பலா நான் எதையுமே செய்ய மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.. விட்ருங்க.." என்று ஒரே போடாகப் போட்டுத் தப்பித்துக் கொண்டாராம்.

இந்த அதிர்ச்சியை சமாளிக்கத்தான் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸை போட்டு முதல்வரை அழுக வைத்து சமாளித்துவிட்டார்கள். ஆனாலும் அஜீத் கொடுத்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் இதே அஜீத்துக்கு பத்திரிகை வைத்து அழைப்புவிடுக்கப் போனவர்கள் கொடுத்ததும் ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்.

"நானும் வாழ்த்துறேன்.. பொதுவா நான் இந்த மாதிரி பங்ஷன்ல கலந்துக்குறதே இல்லையே.. என்னுடைய பங்களிப்பா எவ்வளவு வேணுமா சொல்லுங்க.. அதைக் கொடுத்துடறேன்.." என்றுதான் அஜீத் சொல்லியிருக்கிறார். ஆனால் அழைக்கப் போனவர்கள் அப்போது வைத்த நக்கலும், கிண்டலும், மிரட்டலும்தான் அஜீத்தை அப்படி பேச வைத்துவிட்டது என்கிறார்கள்.




அந்தப் பேச்சுக்கு ரஜினி மட்டுமல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி பேரும் கைதட்டி ஓய்ந்துதான் போயிருக்கிறார்கள். இப்போது நெட்டில் ஓடும் கிளிப்பிங்ஸ்களை கேட்டுப் பாருங்கள். தெளிவாகவே தெரிகிறது. மறுநாளில் இருந்து பல இளம் நடிகர்கள், நடிகைள், இயக்குநர்கள், பிரபலங்கள் என்று பலருமே அஜீத்திற்கு போன் செய்தும், மெஸேஜ் அடித்தும் பாராட்டித் தள்ளிவிட.. தனது எதிர்ப்புக் குரல் திரையுலகிலும் மையமாக சுழன்றுவருவதை அஜீத்தும் புரிந்து கொண்டிருந்தார்.

அதேவேளை கலைஞர் டிவி நிர்வாகிகளையும், விழா அமைப்பாளர்களையும் அழைத்து "கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." என்று கலைஞர் காய்ச்சி எடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை வேறு முலாம் பூசி வெடிக்கத் துவங்கியுள்ளது.

சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி, நடிகர் சங்க நிகழ்ச்சிகள், நெய்வேலி ஊர்வலம், இராமேஸ்வரம் ஊர்வலம், ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் என்று அத்தனைக்கும் அஜீத்தை அழைப்பதற்காக ஒரு தனிப்படையையே போட வேண்டிய நிலைமை என்று இருந்ததால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அஜீத் மீது காட்டமாகவே இருந்தார். அதனை நக்கீரன் பத்திரிகையில் அப்படியே பேட்டியாக அளித்திருந்தார்.

அஜீத்திற்கு எதிராகப் பேட்டியளிக்க கட்சி நடிகர், நடிகையர் தவிர மற்ற பொதுவானவர்கள் யாரும் முன் வராததால் சம்பந்தப்பட்ட டிவி வட்டாரத்தில் இருந்து கை காட்டிய பின்பே ஜாக்குவார் தங்கம் லைம்லைட்டிற்கு வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அவருடைய பேட்டியையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட.. விஷயத்தை பெரிதாக்கியே தீருவது என்ற நோக்கத்தில் உருவானதுதான் அவருடைய வீடு தாக்கப்பட்டது என்கிற சினிமா திரைக்கதையில் உருவான புகார் நடவடிக்கை.

அஜீத்தின் தூண்டுதல் என்று சொல்லி புகாரை பதிய வைத்து அதையை நடிகர் சங்கத்திலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். அதே நடிகர் சங்கத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்குவார், "ரஜினி ஒரு ஜோக்கர். அவர் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.." என்று சொன்னது மிகப் பெரிய அதிர்ச்சி.

இதற்கு இந்த நிமிடம்வரையிலும் நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் கூட்டப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் அஜீத் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் எனவும், ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்து முடித்திருக்கிறார்கள். ஜாக்கிவாரின் ரஜினி பற்றிய கமெண்ட்டுக்கும், அஜீத் பற்றிய பேச்சுக்கும் எந்தவித ரியாக்ஷனும் அந்த அறிக்கையில் இல்லவே இல்லை.


நடிகர் சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால்தான் சிங்கப்பூரில் கல்லா கட்ட முடியும் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். வந்தார். இப்போது வங்கியில் கல்லா நிரம்பி வழிகிறது. சென்சிடிவ்வான காவிரி பிரச்சினையில் தலையைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தும் வராமல் போனால் கர்நாடகாவிற்கு ஆதரவாளன் என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்துபோய் வந்து பேசியதில் இரண்டு பக்கமும் குட்டு வாங்கிக் கொண்டு போனார். விதி வலியதாச்சே.. சங்கத்தின் மூலம் நடத்திய ஈழப் போராட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்றார்கள். வந்தார். பேசினார். தன் கடமையை சங்கத்திற்காக முடித்துவைத்துவிட்டுப் போனார்.

நடிகைகள் பற்றி ஆபாசமாக எழுதிய 'தினமலர்' பத்திரிகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்வதைப் போல் பேசிவிட்டுச் சென்றார். அதையே கிண்டல் செய்தவர்கள் பின்பு வந்து பேசியவர்கள் பேசிய பேச்சுக்களால் விளைந்த விளைவுகளைப் பார்த்த "ரஜினி பேசியது சரிதான்.." என்றார்கள் கடைசியில்.

'ஜக்குபாய்' திரைப்படம் இந்த 25-வது நாளான இன்றைக்கு சென்னையில் மட்டும் வெற்றிகரமாக 3 தியேட்டர்களிலாவது ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் ரஜினிதான். ஏதோ தன்னால் முடிந்த அளவுக்காவது படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுவோம் என்ற எண்ணத்தில் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி கிக் ஏத்தினார். ஆனாலும் படம் பெயிலியர் ஆனது வேறு கதை.

'ஜக்குபாய்' படத்தின் பிரிவியூவுக்கும் அழைத்தார்கள். கூட்டத்தோடு கூட்டமான பிரிவியூக்களுக்கு வராதவர் இந்த அழைப்பை மட்டும் ஏற்று வந்தார். நடிகர் சங்கத் தலைவருக்கு திருப்தியளிக்கும்வகையில் அவருக்கு இன்றுவரையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறார் ரஜினி. அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை.. இதுதான் ரஜினியின் ராசி..!

ஏதோ இந்த சினிமா அமைப்புகளினால்தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடுகின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். கலைஞர் டிவிக்கு காசு பெயர்வதற்கு நாங்கள் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஒருவகையில் இவர்கள் சொல்வதும், கேட்பதும் நியாயம்தான்.

உண்மையான பாராட்டுவிழா என்றால் எதற்கு ஆடல், பாடல், கேளிக்கைகள்..? பேச்சு மட்டும் போதாதா..? பேசியே தீருவது என்றால் ஒருவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை மேடைகளில்தான் பேசுவார்கள். அவர்களுக்கே எரிச்சலாக இருக்காதா..? கோபம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு, எரிச்சல் இருந்தாலும் இல்லாமல் காட்டிக் கொண்டு பேசிவிடு என்று சொன்னால் அந்தப் பேச்சில் என்ன உண்மையான அன்பா வெளிப்பட்டிருக்கும்..?

முதல்வர் இந்த பாராட்டு பற்றிய விஷயத்தில் உலகத்திலேயே மிக, மிக வித்தியாசமான மனிதர். இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது. அவருக்குத்தான் புரியாது என்றாலும் இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு கூஜா தூக்குகிறார்கள்..? தூக்கினால் தூக்கட்டும். தூக்க மாட்டோம் என்பவர்களை விட்டுவிட வேண்டியதுதானே..? ஊரைவிட்டே ஒதுக்குவோம் என்று சொல்லும், இவர்களுக்கும் கிராமங்களில் மரத்தடி பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும் என்ன வித்தியாசம்..?

ரஜினியும், அஜீத்தும் முதல்வரை சந்தித்த அன்று மாலை நடந்த 'பாடகசாலை' படத்தின் கேஸட் வெளியிட்டு விழாவில் பேசிய பெப்ஸியின் தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்...” என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல பெப்ஸி தலைவருக்குள் இருந்த 'உடன்பிறப்பு' பாசம் வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கலைஞரின் பாராட்டு விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பல கலைஞர்களை மிரட்டிப் பணியவைத்த இவர்கள், நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. 'திரையுலக அஷ்டாவதனி' விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க'த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவனாக யாருமே இருக்க முடியாது என்பதுதான். ஒன்று நீ எனக்கு நண்பனா இரு. அல்லது அவனுக்கு நண்பனாக இரு. இரண்டுமே இல்லாவிடில் நீ எனது எதிரிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் இரு தரப்பு அரசியல்வியாதிகளும். அந்த வியாதி இப்போது சினிமாவுலகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களே தமிழ் இன உணர்வு இல்லாதவர்கள் என்கிற ரீதியில் பேச்சு எழுவது பிரச்சினை இப்போது எந்தத் திசையில் போகிறது என்பதை உணர்த்துகிறது. ஜாக்குவார் தங்கம் தான் சார்ந்திருக்கும் நாடார் இனத்தினரின் பெயரை போஸ்டரில் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இனப் பிரச்சினையில் உட்புகுந்து இப்போது ஜாதிப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது. இந்த லட்சணத்தில் இதற்கு திருமாவளவனின் ஆதரவும் ஜாக்குவார் தங்கத்துக்காம். இப்படி எதையாவது செய்து வருங்கால முதல்வர் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் திருமா. திருமாவின் ஆதரவு ஜாக்குவாருக்கு என்றவுடன் ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவு ஈரோட்டு நாயக்கரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடமிருந்து கிடைத்திருக்கிறது. சபாஷ்.. மெல்ல மெல்ல அரசியலும் உட்புகுகிறது. எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.

கலையில் மொழி இல்லை என்று இவர்களுடைய முன்னோர்கள் சொல்லியதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், மது என்று தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவரவர் தாய் மொழியில் சங்கங்களை ஆரம்பித்தாலும், இந்த மொழித் திரைப்படங்கள் அடுத்த மொழியிலும், அடுத்த மொழித் திரைப்படங்கள் இந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுத்தான் வந்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராஜ்குமார், நாகேஷ்வரராவ், பிரேம்நசீர் என்று அக்கால ஹீரோக்கள் அனைவருமே தங்களுக்குப் பொருத்தமான அடுத்த மாநிலக் கதைகளை தனதாக்கி அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள்.

இன்றைக்கு 'தமிழ்..' 'தமிழ்' என்று பேசத் துவங்கியிருக்கும் பெப்ஸியின் தலைவர் குகநாதனே தெலுங்கிலும் எத்தனையோ திரைப்படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். தமிழைவிட தெலுங்கில்தான் குகநாதன் கதை விஷயத்தில் ரொம்பவே பிரபலம்.. தெலுங்குலகில் ‘ரிப்பேர் திலகம்' என்பார்களாம் அவரை. முடிச்சவிழ்க்க முடியாத ‘திரைக்கதை முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கில்லாடி குகன்' என்று பாராட்டப்பட்டவர் அவர். ஆனாலும் இன்றைக்கு தான் தெலுங்கிலும் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியதையும், சம்பாதித்தையும் மறந்துவிட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆரம்பக் காலத்தில் ஏவி.எம்.மின். ஆஸ்தான கதாசிரியராக இருந்த குகநாதன்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘குமரிக்கோட்டம்', ‘புதிய பூமி' படங்களுக்கு கதாசிரியர். எஸ்.பி.முத்துராமன் முதல்முதலாக இயக்கிய ‘கனமுத்துப்பாப்பா'வின் கதாசிரியரும், தயாரிப்பாளரும் இவர்தான். சிவாஜியின் ‘ராஜபார்ட் ரங்கதுரை' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அஜீத் நடித்த “மைனர் மாப்பிள்ளை” படத்தை இயக்கி தயாரித்ததும் குகநாதன்தான். ஆனால் இதுதான் தமிழில் குகநாதன் தயாரித்த கடைசி படம்.

ஒருவேளை அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் அஜீத்திற்கும், குகநாதனுக்கும் இடையில் ஏதாவது மோதல் இருந்திருக்குமோ என்கிற ரீதியில் பத்திரிகையாளர்கள் இப்போது தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.

குகநாதனின் சர்ச்சைக்கிடமான அந்தப் பேச்சு சற்று ஓவரானது என்பதை திரையுலகப் பிரபலங்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைய சமாதானத்துக்காக அறிக்கையில் கையெழுத்திட்டதாக ராதாரவி சொல்கிறாராம். ஆனாலும் குகநாதனின் அந்த மேடைப் பேச்சு நடிகர்களை இப்போது உசுப்பிவிட்டிருக்கிறது.

பல கண்டன போன்கால்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறகு நடிகர், நடிகைககளை விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் பெயரில் குகநாதன் மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தியதாகவும் இப்போது நடிகர் சங்கத்தின் மூலம் முறைப்படியான புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். குகநாதனின் பேச்சு எல்லை மீறியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை சரிவர பத்திரிகைகளில் வெளிவராமல் போயிருக்கிறது.. ஏன் என்று தெரியவில்லை.

அஜீத் இப்போதுவரையிலும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். ஆனாலும் "நமக்குள்ளதான.. ஒரு பேப்பர்ல எழுதி அறிக்கைவிட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. அடுத்த நாளே எல்லாரும் மறந்திருவாங்க.." என்ற ரீதியில் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துதான் வருகின்றன.

இடையில் அவர் தெம்பாக இருப்பதற்கு இன்னுமொரு அரசியல் காரணமும் உண்டு. தயாநிதி அழகிரிக்கு அடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினாலும், மதுரையின் பட்டத்து இளவரசரால் அந்தத் தடையை நொடியில் தூக்கிவிட முடியும் என்கிறார்கள் சிலர்.

இதற்கு, நயன்தாராவுக்கு முன்பு ஒருமுறை பெப்ஸி அமைப்பு தடை போட்டிருந்தபோது "ஆதவன் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு சப்தமில்லாமல் பெப்ஸியின் அந்த தடை உத்தரவை குப்பைக் கூடைக்குப் போகச் செய்ததை உதாரணம் காட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான். அன்றைக்கு அவர்கள் சம்பாதிக்க அத்தனை மொழிகளும் வேண்டும்.. அத்தனை மொழிக் கலைஞர்களும் வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தவர்கள் இன்றைக்கு சூடு குறைந்து, சுதியிறங்கி மைக் மட்டுமே மிச்சம் என்ற நிலைமைக்கு வந்த பின்பு தமிழ் மட்டுமே நம் மொழி என்று பேசுவது நயவஞ்சகத்தனம்.

தாங்கள் கலைஞரை சந்தித்த பிறகும் தங்களுக்கு எதிராகக் கண்டன அறிக்கையும், தடைகள் வருவதையும், தமிழின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றபோதும் சங்க அமைப்பின் பெயரில் தங்களை நோக்கி கல்லெறியும் சம்பவங்களைப் பார்க்கின்ற இந்த நேரத்திலாவது ரஜினியும் அஜீத்தும் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.


ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அதோ கதிதான் என்பதை முதலில் கலைஞரும், பின்பு ஜெயலலிதாவும் இப்போது மீண்டும் கலைஞரும் அவ்வப்போது பலருக்கும் உணர்த்தி வந்தாலும் அனுபவப்பட்டவர்களே புரியாததுபோல் இருப்பதும், நடிப்பதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.

இந்த வெட்கக்கேட்டை செய்த, செய்யும் இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கலைத்துறையின் துரதிருஷ்டம்

Read more: http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_22.html#ixzz275B1ZoBo


1991-ம் ஆண்டு இந்திய விமானம், ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு மலையாளத்தில் படம் எடுக்கப்பட உள்ளது. இதனை மேஜர் ரவி இயக்குகிறார். இதற்கான கதை விவாதம் கொச்சியில் நடந்தது. முன்னதாக கொச்சியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப்பை மேஜர் ரவி சந்தித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவி, படத்திற்கு கந்தகார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மோகன் லால் மற்றும் அமிதாப் பச்சான் நடிக்க வைக்க முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருவகிறது எனக் கூறினார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.


அஜ்மல், சுனைனா ஜோடியாக நடிக்கும் படம் கதிர்வேல். வி.செந்தில் குமார் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் இயக்குகிறார். இப்படத்துக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாடல் காட்சியொன்று நள்ளிரவில் படமாக்கப்பட்டது. தமிழ்நாட்டு குதிர என்னை அடக்க யாரு எதிர என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை மாடல் அழகி தஷ்கவுசிக் நடனம் ஆடினார். அவருடன் 500 துணை நடிகர், 40 நடன கலைஞர்களும் ஆடினார்கள். படப்பிடிப்பை காண அங்கு கூட்டம் கூடியது. ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் திடீரென துணை நடிகைகள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். நிலைமை மோசமானதை உணர்ந்த இயக்குனர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை தடியடி நடத்தி விரட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.


இந்தி நடிகை தீபிகா படுகோன், சல்மான் கானுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் மூலம் இந்தி திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியவர் தீபிகா. இப்போது சல்மான் கானுடன் இணைய விரும்புகிறாராம். தீபிகாவின் விருப்ப நடிகர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம் சல்மான். இதுகுறித்து தீபிகா கூறுகையில், சல்மானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். ஏற்கனவே இரு படத்தில் இருவரும் இணைவதாக இருந்தது. ஆனால் அது கை கூடவில்லை. அது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் எதிர்காலத்தில் இருவரும் இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தீபிகா. தற்போது பர்ஹான் அக்தருடன் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் நடித்துள்ளார் தீபிகா. இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான அக்ஷய் குமார், சைப் அலி கான் ஆகியோருடன் நடித்துள்ள அனுபவம் கொண்ட தீபிகா, அடுத்து அபிஷேக் பச்சன், இம்ரான் கான், நீல் நிதின் முகேஷ் ஆகியோருடனும் ஜோடி போட இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புக்கு சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி, இலவசமாக கல்விச் சேவையாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. சமீபத்தில் சங்கீதா என்ற பிஸியோதெரபிஸ்ட்டை கரம்பிடித்த கஞ்சா கருப்பு, தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறாராம். பிசியோதெரபி தேர்வு எழுதியிருக்கும் சங்கீதா, தேர்ச்சி பெற்றதும், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலைக்கு சேரப்போகிறார். வாங்கும் சம்பளத்தில் பாதியை தன் மாமனார் - மாமியாருக்கு தர வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் கஞ்சா கருப்பு. மீதமுள்ள தொகையை வைத்து, படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி கஞ்சாவிடம் கேட்டால், அந்த புள்ளய படிக்க வெச்சது அவுங்க அப்பா - அம்மாதானேண்ணே.... அதான் சம்பளத்துல பாதியை அவுங்களுக்கு கொடுக்கணும்னு சொல்லியிருக்கேன். மீதி பணத்த கஷ்டப்படுற பசங்களுக்கு உதவுறதுக்கு பயன்படுத்தணும்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணிருக்கோம்ணே... என்கிறார் மனிதாபிமானத்துடன்

Sunday, February 21, 2010


The wait is over. Asin is back with a bang in Kollywood!

One of the most popular actors in Tamil cinema has agreed to be the leading lady opposite Ilayathalapathy Vijay in the Tamil remake of Malayalam Bodyguard!



Sources close to Asin have confirmed that she has finally given her nod to do the Tamil remake. It will be the hat trick film for one of the most popular pair in Tamil, Vijay and Asin who are coming together after the super success of Sivakasi and Pokkiri.

The film will be directed by Siddique who did the original and produced by Sivaraju Venkatraju of Geetha Chitra International, who last made Priymanavale with Vijay in 2000.

Actually three years back when director Siddique had narrated the story to Asin she had promised to do it in Tamil, if Vijay was the hero. Asin is one person who never breaks a promise. And when Siddique after the release of Malayalam Bodyguard featuring Nayanthara and Dileep, said that he was ready with producer Raju’s backing and Vijay’s call sheet, Asin gave the green signal.

Siddique’s Bodyguard is basically a beautiful love story and the heroine is the pivot around which the film revolves. Remember that in Malayalam, Nayanthara had done a brilliant job, which is one of her best performance till date.

Please note Asin in all her interviews has made it clear that she will do a south film if she gets a good script. In a way if Asin does the role in Tamil, it will be a fantastic come back for the actress.

Asin always wanted a pan Indian presence and after all doing a movie in south will enhance her repertoire of films.

Siddique who is now reworking the script is a very happy man, because he wrote the original keeping Asin in mind. The shoot of Bodyguard in Tamil is likely to start in the middle of March in Chennai


தனிப்பட்ட பிரச்சினைக்கெல்லாம் ஜாதியை இழுப்பது ஃபேஷனாகிவிட்டது தற்போது. பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் விவேக் தஞ்சமடைந்தது தனது ஜாதி சங்கத்தை. இப்போது அஜித் பிரச்சினையில் ஜாக்குவார் தங்கமும் ஜாதியை சொல்லி மிரட்டி வருகிறார். தனது ஜாதியினருடன் சென்று அஜித் வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர் சொன்னதையடுத்து அஜித்தின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், அஜித் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக தெரிவித்தார். அஜித்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ரஜினி ஒரு கோமாளி அவர் சொல்வதையெல்லாம் யாரும் சீரியஸா எடுத்துக்கிறதில்லை என்றார். அஜித் பிரச்சினையில் ஜாக்குவார் தங்கம் அஜித்தையும், ரஜினியையும் தாக்கிப் பேசினார். அவரது பேச்சை இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை பட வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. இதனையடுத்து, படத்தின் போட்டோ செஷன் விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்தான் இந்தி கஜினிக்கும் ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. அடுத்த மாதமா இல்லை அடுத்த வருடமா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில். இதற்கு தயாரிப்பாளர்தான் பொறுப்பான பதிலளிக்க வேண்டும்.


வி.கே மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜே.சரவணன், சி.பாஸ்கர் தயாரிக்கும் படம் தம்பிக்கு இந்த ஊரு. இதில் பரத், பிரபு, சனாகான் நடிக்கின்றனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு. தரண் இசை. பத்ரி இயக்கியுள்ளார். விருமாண்டி படத்தில் வரும் உன்னைவிட என்ற பாடல் பாணியில் தம்பிக்கு இந்த ஊரு படத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். ஏறக்குறைய விருமாண்டி பாடலின் ரீமிக்ஸ் தான் இந்த பாடல். அந்த பாடலில் விருமாண்டி கிருதாவுடன் பரத் வருகிறாராம். வரும் 26ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்

Friday, February 19, 2010


3 இடியட்ஸ் இந்திப் படத்துக்குப் பிறகு, அமிதாப்புடன் நடித்துள்ள தீன்பத்தி படத்தின் இறுதிவேலையில் இருக்கிறார் மாதவன். இதுகுறித்து அவர் கூறியது: தீன்பத்தி படத்துல பேராசிரியரா நடிச்சிருக்கேன். காந்தி வேடத்துல நடிச்ச ஹாலிவுட் நடிகர் பென் கிங்க்ஸ்லியோட ஒரு காட்சியில் வர்றேன். லண்டன்ல படப்பிடிப்பு நடந்துச்சு. அவரோட ஒரு நாள்தான் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், நல்ல அனுபவமா இருந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், இந்தியில தொடர்ந்து நடிக்க போறேன். தமிழ்ல இரண்டு படங்கள். அடுத்த வாரத்துல இதுக்கான அறிவிப்பு வரும். சினிமாவுல அதிர்ஷ்டம்தான் முக்கியம். அது எப்படி நம்மை கொண்டு போகுதோ அந்த வழியிலதான் நம்மால போக முடியும். எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன் என்று கூறுகிறார்.


உங்களது முதல் பட வாயப்பு பற்றி...?
"நான் மும்பையில் படித்துக் கொண்டிருக்கும்போது என் கிளாஸ் டீச்சர் மூலம் ஹிந்தி படமொன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்குப் பதிமூன்று வயது. தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். அப்போது சின்ன வயசு என்பதால், வெயிட்டான வேடங்கள் செய்ய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

இருந்தாலும் சினிமா மீடியாவை விட, மனசு வரவில்லை. அடுத்தடுத்து சில ஹிந்திப் படங்களில் நடித்தேன். அந்த ஹிந்திப் படங்களைப் பார்த்து தெலுங்குப் படங்களில் நடிக்க அழைத்தார்கள். தெலுங்கில் தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்தேன்.

அப்போதுதான் தமிழ் "கேடி"யில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து "வியாபாரி", "கல்லூரி", "படிக்காதவன்", "அயன்", "பையா", "கண்டேன் காதலை" படங்கள். தற்போது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் சென்னையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ரொம்பவும் ரசித்து நடித்த படம்...?

என்னோட கேரியரில் சிறந்த படம் எது என்றால் அது "கல்லூரி"தான். எல்லோரும் நான் நடித்த, "ஹேப்பி டேஸ்" என்ற படத்தை பிரமாதம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ரொம்பவும் அனுபவித்து நடித்த படம் "கல்லூரி"தான்.

பள்ளியில் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்துவிட்டதால் என்னால் கல்லூரி கலாட்டாக்களை என்ஜாய் பண்ண முடியவில்லை. அந்த உணர்வுகளை "கல்லூரி" படத்தில் நடிக்கும்போது அனுபவித்தேன். இப்போதும் கூட ஓய்வு கிடைக்கும்போது "கல்லூரி" படத்தைப் பார்ப்பேன்.

தமிழைப் பொறுத்தவரை நீங்கள் ராசியில்லாத நடிகையாமே?

இப்படிச் சொல்லிக்கொண்டு எத்தனைப் பேர் கிளம்பியிருக்காங்க? அப்படி என்றால் என்னுடன் "கேடி" படத்தில் நடித்த இலியானாவை பற்றி என்ன சொல்வீர்கள்? "கேடி" தோல்விப் படம் என்றாலும் அடுத்து நான் நடித்த "வியாபாரி", "யார் இந்தப் பொண்ணு?" என்று என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அது மாதிரி என் அழகைவிட, "நன்றாக நடிக்கத் தெரிந்த பொண்ணு" என்று அடையாளம் காட்டியது "கல்லூரி". தேங்ஸ் டு பாலாஜி ஸார். இப்படி ஒவ்வொரு படமும் என்னோட கிராஃப்ல உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ராசியில்லாத நடிகை என்று நினைத்திருந்தால் என்னை எப்போதோ வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் இவ்வளவு படங்களில் நடித்திருக்க முடியாதே!

"அயன்" படத்தில் சூர்யாவுடன் இணைந்த நீங்கள், அடுத்து அவரது தம்பி கார்த்தியுடன் "பையா"வில் இணைந்திருக்கிறீர்களே?

அதிலென்ன தப்பு? ஸ்ரேயா, ரஜினி ஸார் கூட "சிவாஜி'" படத்துல நடித்துக் கொண்டிருக்கும்போதுதானே "திருவிளையாடல்" படத்தில் தனுஷூடனும் நடித்துக் கொண்டிருந்தார்? இது சினிமா. ஒவ்வொரு படத்திலும் நாம் ஏற்கும் கதாபாத்திரத்தோட தன்மையை மட்டும்தான் பார்க்கணும்.

சூர்யா ஸார் மிஸ்டர் க்ளீன், ரொம்ப நல்ல மனிதர். நடிப்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். கார்த்தி ரொம்ப ஸ்மார்ட். பாலாஜி சக்திவேல் ஸாரும், கே.வி.ஆனந்த் ஸாரும் கொடுத்த பயிற்சி என்னை தமிழ் சினிமா உலகில் இன்னும் நிறைய நாட்கள் நீடிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

"பையா"வில் நயன்தாரா நடிக்கவிருந்த பாத்திரத்தில்தானே நீங்கள் நடிக்கிறீர்கள்... அது பற்றி?

அது போன்று, நான் நடிக்க வேண்டிய சில படங்கள் என் கைநழுவிப் போயிருக்கின்றன. அதில் வேறு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அதுமாதிரிதான் இதுவும். நயன்தாரா "பையா" படத்தில் நடிப்பது பற்றி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போது என்னிடம் வந்து நடிக்கக் கேட்டார்கள்.

ஆனால் அப்போது நான் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு பிரச்சினைகளெல்லாம் முடிந்த பிறகு வந்து பேசியபோதுதான் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்?

இதுவரைக்கும் நான் யாரையும் காதலிக்கவில்லை. காரணம், சினிமாவில் காதலிக்கிறதுக்கே எனக்கு நேரம் போதவில்லை. "பையா"வோட ஷூட்டிங் பாதிதான் முடிஞ்சிருக்கு. அடுத்து பரத் கூட "கண்டேன் காதலை" படத்தில் நடிக்கிறேன்.

இது "ஜப் வி மெட்" ஹிந்திப் படத்தின் ரீ-மேக் என்பதுதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே? மற்ற மொழிகளைவிட தமிழ் எனக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த முறை உங்களுக்குப் பேட்டி கொடுப்பதற்குள் சுத்தமான தமிழில் பேச கற்றுக் கொள்ளுவேன்.

உங்கள் அழகின் ரகசியம்?

என்னோட சினிமா பிரவேசத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என் கலர்தான். நான் சிந்தி இனத்தைச் சேர்ந்தவள். சிந்திகாரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருப்பார்கள். அதை நானும் கடைபிடிக்கிறேன்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஜூஸ் குடிப்பேன். படப்பிடிப்பு இல்லையென்றால் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது தூங்குவேன். இதெல்லாம்தான் என் அழகின் ரகசியம் என்று நினைக்கிறேன்" என்றார் தமன்னா.


குள்ளமான உருவம், சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் தோற்றம்... என பா படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன். இந்த உருவத்தை முதல் தடவை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பிரமித்து போவார்கள். உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றிய அமிதாப். மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம். இதனையடுத்து கமலஹாசன் பா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பா படத்தில் இசையமைத்த இளையராஜாவை சந்தித்துள்ளார் கமல். அப்போது பா படத்தை பற்றி கமலஹாசனும், இளையராஜாவும் பேசியதாக தெரிகிறது. ஆனால் பா ரீமேக்கில் கமல் தான் நடிக்கிறார் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. மேலும் கோடம்பாக்கத்தில் பா படத்தின் ரீமேக்கில் நடிக்க கமல் தான் சரியானவர் என்பது பலரின் கருத்து. உலகநாயகனாச்சே! சும்மா அசத்திடமாட்டாரா என்ன?

Thursday, February 18, 2010


For more widgets please visit www.yourminis.com

Wednesday, February 17, 2010


பிரபலமானவர்களில் மிகவும் அதிகமாக விரும்பப்படும், மகிழ்ச்சிகரமான தம்பதியர் பட்டியலில் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இணையத்தளம் இதுதொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தியது. சுமார் 3.6 லட்சம் பேர் இதில் தங்களின் ஓட்டை பதிவு செய்தனர். இதில், ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் ஜோடி தான் மிகவும் சந்தோஷமான தம்பதி, தாங்கள் விரும்பும் தம்பதி என 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அடுத்த இடத்தை ஷாருக்கான்-கௌரி ஜோடி பெற்றுள்ளது. இவர்களை 29 சதவீதம் பேர் மகிழ்ச்சிகரமான தம்பதி எனக் கூறியுள்ளனர். மூன்றாவது இடத்தில் அமிதாப் பச்சன்-ஜெயாபச்சன் ஜோடியை சுமார் 20 சதவீதம் மக்கள் தேர்வு செய்துள்ளனர். நான்காவது இடத்தை அமீர்கான்-கிரன் ராவ் ஜோடி பிடித்துள்ளது.


சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் இரண்டு பாடல்களை ஏழு நாட்களுக்குள் எடுத்து முடித்திருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆச்சர்யத்தில் வாயடைத்து போயிருக்கிறது கோடம்பாக்கம். அடுத்தவர்கள் தயாரிப்பில் உருவாகிற படமாக இருந்தால் கோடிக்கணக்கில் செட் போடும் இயக்குனர்கள் அதுவே தங்கள் சொந்த தயாரிப்பு என்றால், ஓலை குடிசையே சூப்பர் என்பார்கள். இதற்கு உதாரணமாக சொந்தப்படம் எடுக்கிற இயக்குனர்களில் பலரை சொல்லலாம். இப்படிப்பட்ட இயக்குனர்களுக்கே சவால் விடுவார் போலிருக்கிறது சூர்யா. இப்படத்தில் வரும் பாடல் காட்சிக்காக துபாய் போயிருந்தது சிங்கம் படக்குழு. பொதுவாக சூர்யா படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்கள் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஏழு நாட்களில் இரண்டு பாடல்களை எடுத்து முடிச்சிரலாம் என்றாராம் சூர்யா. படத்தின் இயக்குனர் ஹரி சும்மாவே சுறுசுறுப்பு. சூர்யா இப்படி சொன்னதும் நடனக்கலைஞர்களை பெண்டு நிமிர்த்திவிட்டாராம். மஸ்கட், துபாய் என்ற இரண்டே இடத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்கள். மத்தவங்களும் இதையே கடைபிடித்தால் நல்லாயிருக்கும்!


சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ள படம் தீராத விளையாட்டு பிள்ளை. இதில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நீது சந்திரா, சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். திரு இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோவையில், தீராத விளையாட்டு பிள்ளை படம் ஓடும் தியேட்டர்களுக்கு விஷால் நேற்று விசிட் அடித்தார். முதலில் கே.ஜி. பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றார். அவரை தியேட்டர் மேலாளர் ஸ்ரீநாத் வரவேற்றார். கோபுரம் பிலிம்ஸ் விநாயகர் மணி சால்வை அணிவித்தார். தியேட்டருக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்தும், வாண வேடிக்கை நடத்தியும் விஷாலை வரவேற்றனர். காலை காட்சி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே வந்து திரையின் முன்பு தோன்றிய விஷாலை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். அவர்களிடம் விஷால் பேசியது: ஏற்கெனவே நான் நடித்த ஒரு படத்துக்காக, இந்த தியேட்டருக்கு ரகசியமாக வந்தேன். உங்களோடு அமர்ந்து படம் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டேன். அப்போது திரையில் நான் தோன்றும் காட்சிகளை கைதட்டி வரவேற்றதை கண்டேன். அதேபோல் இப்போதும் நல்ல வரவேற்பு அளித்துள்ளீர்கள். புதிய கோணத்தில் என்னை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடித்தேன். விஷால் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தமாட்டான் என பலரும் கூறினர். ஆனாலும் நம்பிக்கையுடன் நடித்தேன். வெற்றியைத் தேடி தந்துள்ளீர்கள். இது எனது வெற்றி அல்ல, நமது வெற்றி. ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வரும் காலங்களிலும் இதுபோல் நல்ல படங்களில் நடிப்பேன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது வெற்றிக்கு முக்கிய காரணம். எல்லா ஊரிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்சில் நடித்ததால் ஒரு நடிகனாக, எனக்கு முகவரி கிடைத்துள்ளது. உங்கள் சார்பிலும், எனது சார்பிலும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.


இரண்டு கதாநாயகன் கதையுள்ள படங்கள் அதிகமாக வரவேண்டும் என்கிறார் ஆர்யா. இதுபற்றி அவர் கூறியது: நான் கடவுள் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன். நான் கடவுள் என் திரையுலக வாழ்வில் மைல்கல். அதுபோல் அவன் இவன் படமும் எனது இன்னொரு பரிமாணத்தை காட்டும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டு கதாநாயகன் படங்களில் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அறிந்தும் அறியாமலும் தொடங்கி பட்டியல் என தொடர்ச்சியாக இரண்டு கதாநாயகன் கதைகளில்தான் நடித்து வருகிறேன். இரு நாயகர்களுடன் நடிக்கும்போது சக நடிகருடன் நடிப்பு போட்டி ஏற்படுகிறது. இதனால் நன்றாக நடிக்க வேண்டும் என்ற அதிகமாக யோசிக்க வைக்கிறது. இரண்டு கதாநாயகன்கள் கதைக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன். இதுபோல் நிறைய படங்கள் வரவேண்டும். மதராசப் பட்டணம் படம் முடிந்துவிட்டது. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை எப்படி இருந்தது என்பதை இப்படம் காட்டும். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமையும். தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று கூறினார்.


தமிழ்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பகட்டையே உருக்குலைய வைத்து வெற்றி கண்டிருக்கும் தயாநிதி அழகிரி, தனது அடுத்த படத்திற்கு குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரை தேர்தெடுத்திருந்தார். முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி தயாரிக்கும் இப்புதிய படத்திலும் மிர்ச்சி சிவாதான் கதாநாயகன். படத்தின் தலைப்பை கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, இந்த ஆங்கில தலைப்புக்கெல்லாம் வரிவிலக்கு கிடையாது என்று கூறிவிட்டாராம். இதனால் வரிவிலக்கு கிடைக்கிற மாதிரி நல்ல தமிழ் தலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார்களாம் மேற்படி படக்குழுவினர். அதேநேரம் இப்படத்தை தயாநிதி அழகிரியின் க்ளெவ்ட் நைன் நிறுவனம் தயாரிக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. தமிழ்படத்தை எப்படி சி.எஸ்.அமுதன் அண்ட் கோவின் வொய் நாட் என்ற கம்பெனி தயாரித்து, பின்னர் தயாநிதிக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குபவர்கள் புஷ்கர்-காயத்ரி தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது


பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த விழாவில்தான் எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள் என்று குரல் கொடுத்தார் அஜித். அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது. இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்புகிறது. இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன. இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜித் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் சிறப்பம்சமே அஜித்தின் பேச்சுதான். அதையும் தெளிவாக தவிர்த்து விட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சிக்கு அஜித்தும் வந்திருந்தார் என்றாவது காட்டுவார்களா?


A man of myriad talents Kamal Haasan is planning to revive his literary interests via online. Kamal is a poet, short story writer, novelist, columnist and many more. Many would remember the literary magazine ‘Maiyyam’ run by Kamal through his Kamal Haasan Narpani Mantram. The magazine was suspended a few years ago for good reasons. Now the littérateur in Kamal Haasan could not be put down for long and so he will revive the print magazine on the internet.

When all celebrities of today prefer to tweet to communicate our Kamal Haasan has preferred a traditional magazine online. Kamal has met all his friends in literary circles and discussed about the revival of the magazine.

As it was ‘Maiyyam’ in its online version also will deal with only literature and strictly no politics. It will be a qualitative analysis of contemporary Tamil literature. Of course there will be provisions made for fans to interact with Kamal Haasan. After all a genius who had put over 50 years in the film industry will have a lot to say and lot be asked about. The site will be a treasure of modern Tamil literature and also promote young budding writers.

A-list of achievers like Crazy Mohan and Prof Gnanasambandham are ready to assist Kamal in his new endeavor.

Anything possible for Kamal

Goutham denies


there was news saying Goutham Menon has shot two different endings for the film ‘Vinnaithandi Varuvaya’ and one will be finalized after gauging initial reactions from the public after the film’s release.

But Goutham Menon has denied anything of that sort and affirms he is not of the kind resorting to gimmicks for the success of a film.

‘Vinnaithandi Varuvaya’ is set for release this month end and is expected change the images of its leading stars Silambarasan and Trisha


The entire family members of Suriya, including his parents, are set for a north Indian trip. The reason is the wedding ceremony of Jyothika’s brother, scheduled at the actress’s native place on February 25.

If sources are to be believed, Suriya, who has almost completed the shoot of his 25th film ‘Singam’, will be out of town from next week for at least three days to take part in his brother-in-law’s marriage.

“Jyothika is very affectionate towards her brother. She is eagerly counting the days for the auspicious ceremony.

There is one more reason for the actress to cheer because this is going to be the first biggest function in the family after her daughter Diya was born. And the next big ceremony would be Karthi’s marriage, one has to say.


After the success of ‘Asal’, Ajith is taking a much needed break. Thala is quietly visiting some of the familiar holy places with his family.

When asked about his recent Tirupathi and Velankanni visits, the unassuming star says his spiritual inclinations are not something new and he and his wife Shalini are always open in their views on spirituality. “I always prefer to share my sorrows and happiness with only God”, says Ajith.

He also revealed his secret desire to visit places like Rishikesh and Manasarovar on the Himalayas in the future. Ajith has visited other holy places like Sabarimala and Ajmer before.

When asked about what follows ‘Asal’, the ultimate star said that he is interested to work with Goutham Menon. But he wants to release his 50th film on the Diwali day. The producer has been finalized and the other things are under discussion including the director and cast.

Attacks on Students

For about one and a half month I was in Melbourne when every news channel in India was flashing news of attacks on Indian students there. I feel sorry for the students who were attacked and their respective families.When i was there I visited several places and observed the situation minutely,talked to several people there Indian students,Indians settled there and Australians and came to the conclusion that these are just like criminal cases in any part of the world. I would like to tell everyone concerned that there is no racial discrimination as such . And the hype created by the media is doing more harm than good.

Population of Indian students has increased manifold after the 9/11 attacks in the US . Students from all backgrounds go there as visa rules are not too strict . As universities are earning millions of dollars through these students ,they give admission to maximum number of students. There are some universities where a wife takes admission in some course,so that the husband gets a work visa. Those who cannot afford to pay the expenses have to work and accept whatever job they get like in 7-11 stores,driving late night taxies .They have to live in the outskirts so that they have to pay lesser amount as rents,several students live together in a single room and they do not mind accepting lesser than the minimum amount of wages. And unfortunately, the business men from Indian and Pakistani origin exploit students by giving them lesser than the minimum wages. All these things make them expose themselves to danger and make them an easy prey to miscreants

The only difference we have seen that earlier only Australian students could do IBL (Industry Based Learning) from Australia,foreigners could go abroad but now they have stopped IBL completely for foreign students and job opportunities are better only after you get a Permanent residency.

My suggestion to the parents is that when they send their children there, they should check whether they can support them financially in case they do not get a job . The crime rate there is minimum does not mean that they should not take precautions when they go out and it is better to go out in a group than alone. And go by the highway not by the byway

Attacks on Students

For about one and a half month I was in Melbourne when every news channel in India was flashing news of attacks on Indian students there. I feel sorry for the students who were attacked and their respective families.When i was there I visited several places and observed the situation minutely,talked to several people there Indian students,Indians settled there and Australians and came to the conclusion that these are just like criminal cases in any part of the world. I would like to tell everyone concerned that there is no racial discrimination as such . And the hype created by the media is doing more harm than good.

Population of Indian students has increased manifold after the 9/11 attacks in the US . Students from all backgrounds go there as visa rules are not too strict . As universities are earning millions of dollars through these students ,they give admission to maximum number of students. There are some universities where a wife takes admission in some course,so that the husband gets a work visa. Those who cannot afford to pay the expenses have to work and accept whatever job they get like in 7-11 stores,driving late night taxies .They have to live in the outskirts so that they have to pay lesser amount as rents,several students live together in a single room and they do not mind accepting lesser than the minimum amount of wages. And unfortunately, the business men from Indian and Pakistani origin exploit students by giving them lesser than the minimum wages. All these things make them expose themselves to danger and make them an easy prey to miscreants

The only difference we have seen that earlier only Australian students could do IBL (Industry Based Learning) from Australia,foreigners could go abroad but now they have stopped IBL completely for foreign students and job opportunities are better only after you get a Permanent residency.

My suggestion to the parents is that when they send their children there, they should check whether they can support them financially in case they do not get a job . The crime rate there is minimum does not mean that they should not take precautions when they go out and it is better to go out in a group than alone. And go by the highway not by the byway


Miffed by media reports that he is trying to harm writers, Bollywood star Aamir Khan has resigned from the 10-member committee formed by the government to look into the proposed amendments to the Copyright Act.

“It seems to me that there is an attempt by certain people to attack me in public by printing lies about me, thereby turning the attention away from a genuine debate about copyright issues,” Aamir wrote Tuesday to Human Resources Development Minister Kapil Sibal.

According to media reports, at a recent meeting between producers and writers over the issue of royalties, Aamir tried to take the credit from the writers by saying that a song’s popularity depends on the star it was picturised on and not on the lyricist’s efforts. His remarks apparently angered Javed Akhtar who said that the song Papa kehte hain became a hit despite the fact that Aamir was not a star at that time.

Aamir says he isn’t comfortable facing such allegations.

“I am grateful to you for inviting me to be part of a committee to discuss the various issues regarding amendments to the Copyright Act. However in light of these public attacks on me I don’t think I am comfortable to be part of this committee,” he said in his letter to Sibal.

“I take great pride in my honesty and integrity, and attach an enormous amount of value to my sense of justice and fair play. Monetary achievements have never excited me. If they had, I would have acted in many more than one film a year, thereby being financially much richer than I currently am.”

The actor’s latest release 3 Idiots broke several box office records. But he is not driven by monetary achievements and never hesitates to do challenging work, he said.

“Had I been driven by monetary achievements I would not have produced films that challenge the mainstream and break new ground, films like Lagaan, Taare Zameen Par and Peepli Live, that most producers would hesitate to produce.

“I believe that what I have earned is the love and respect of my colleagues and my audience. And this I have done through my work and through the manner in which I work. This is why such public attacks are most damaging to me emotionally and leave me crippled,” Aamir wrote.

Aamir made his debut with Madan Sharma’s Holi in 1984 but it was his cousin Mansoor Ali Khan’s directorial venture Qayamat Se Qayamat Tak that made him an overnight star. After that there was no looking back for Aamir.

In the letter, he also said that based on his long association with the industry, he has a lot to contribute to the ongoing debate, but cannot make any “meaningful contribution in this atmosphere”.

“In the past 26 years of my involvement with the film industry, I may have made mistakes, but never have I knowingly been dishonest or unfair in my dealings, whether as an assistant director, actor, producer or director.

“I feel I have a lot to contribute to the ongoing debate but I cannot make any meaningful contribution in this atmosphere. Aggression of this type leaves me feeling very disillusioned and sad and I am unable to function.

“Therefore I request you to accept my resignation from this committee and please appoint another person in my place,” he wrote.

“I believe that amendments to the Copyright Act are long overdue and I am so happy that a person like you is spearheading this movement. I believe that the changes that you are bringing about in the sphere of education are so dynamic, progressive and positive, that I have absolutely no doubt in my mind that you will do the same in the field of copyright.”

The panel also includes Javed Akhtar, Boney Kapoor, Mukesh Bhatt, Vishal Bharadwaj, Vishal Dadlani, Prasoon Joshi, Anjum Rajabli, Madhu Manthena and Bhushan Kumar


His rugged physique has gone for a toss! Hrithik Roshan, formerly lean and... never ever mean, has been chomping away on food merrily.


The weight gain, incidentally, was as per instructions from director Sanjay Leela Bhansali who wanted him to look a mite plump since Roshan Jr is enacting a paraplegic in his `Guzaarish.´


"For the first time in my life my waist went up to 34 inches!," he states in a tabloid quote. "I gorged on `batata vadas´ and `bhajjiyas´ just to gain weight.


Presently, Duggu´s back to savouring boiled food, egg whites and salads to lose the flab under the sharp gaze of spouse Sussanne.


Brings to mind Abhishek Bachchan, who gorged on 12 `rosogollahs´ everyday to pile on the pounds for Mani Ratnam´s `Guru´.


Hope, Hrithik´s success is just as sweet.

Tuesday, February 16, 2010












;;