
சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் இரண்டு பாடல்களை ஏழு நாட்களுக்குள் எடுத்து முடித்திருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆச்சர்யத்தில் வாயடைத்து போயிருக்கிறது கோடம்பாக்கம். அடுத்தவர்கள் தயாரிப்பில் உருவாகிற படமாக இருந்தால் கோடிக்கணக்கில் செட் போடும் இயக்குனர்கள் அதுவே தங்கள் சொந்த தயாரிப்பு என்றால், ஓலை குடிசையே சூப்பர் என்பார்கள். இதற்கு உதாரணமாக சொந்தப்படம் எடுக்கிற இயக்குனர்களில் பலரை சொல்லலாம். இப்படிப்பட்ட இயக்குனர்களுக்கே சவால் விடுவார் போலிருக்கிறது சூர்யா. இப்படத்தில் வரும் பாடல் காட்சிக்காக துபாய் போயிருந்தது சிங்கம் படக்குழு. பொதுவாக சூர்யா படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்கள் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஏழு நாட்களில் இரண்டு பாடல்களை எடுத்து முடிச்சிரலாம் என்றாராம் சூர்யா. படத்தின் இயக்குனர் ஹரி சும்மாவே சுறுசுறுப்பு. சூர்யா இப்படி சொன்னதும் நடனக்கலைஞர்களை பெண்டு நிமிர்த்திவிட்டாராம். மஸ்கட், துபாய் என்ற இரண்டே இடத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்கள். மத்தவங்களும் இதையே கடைபிடித்தால் நல்லாயிருக்கும்!
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment