
இயக்குனர் ஹரி தான் இயக்கும் அடுத்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்! தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் என்ற ஆக்ஷன் படம் எடுத்து வருகிறார் ஹரி. இந்தப் படம் முடிந்ததும் விஜயா கம்பைன்ஸூக்காக ஒரு படம் இயக்குவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டப்பட்டுள்ளதாம். அதன்படி அந்தப் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையான இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தனது எல்லா படங்களிலும் அருவாளை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்ட ஹரி, இந்தப் படத்துக்கு அருவா என்றே பெயரிட்டிருக்கிறார். கதையும் வழக்கம் போல திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில்தான் என்பது சொல்லாமலே தெரியும் செய்தி. தனுஷ் இப்போது ஆடுகளம் மற்றும் மாப்பிள்ளை படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடுகளம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மாப்பிள்ளை முடியும் சமயத்தில் அருவா படத்தை ஆரம்பிப்பார்களாம். அருவா படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது
Labels: cinema news
0 comments:
Post a Comment