
கமல்ஹாசன், திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று உலக நாயகன் கமல் ஒரு தொடரும் சரித்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், மற்றும் வெங்கடேஷ் என இந்திய திரையுலகமே கலந்து கொண்டது, நிகழ்ச்சியில் பலர் கமல்ஹாசனின் நடிப்புத்திறமையை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தில் நானும், கமல்ஹாசனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளதாகவும், அப்போது பல நேரங்களில் கமலின் நடிப்பைப் பார்த்து தான் வியந்துள்ளதாகவும், அவரிடமிருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய ரஜினி கலைத்தாய் கமலை மட்டும் கையில் சுமந்தாள், எங்களை தவிர, கலைத்தாயிடம் என் தாயே இது நியாயமா?, கமலை மட்டும் கையில் சுமக்கிறாயே என நான் கேட்டேன், அதற்கு அந்த கலைத்தாய், நீ ஒரு ஜென்மம் மட்டும் நடிகராக வந்திருக்கிறாய், கமல் ஒரு ஜென்மத்தில் நடன இயக்குனராகவும், ஒரு ஜென்மத்தில் இயக்குனராகவும், ஒரு ஜென்மத்தில் நடிகராகவும் என பல ஜென்மங்களை எடுத்து வரும் கமலை சுமப்பது தப்பா? என கேட்டாள். அதற்கு நான் இல்லை தாயே நீ சொன்னது சரிதான். என ரஜினிகாந்த் தன்னை தாழ்த்தி கொண்டு பேசினார். இந்நிலையில் அன்று பேசியதை போல் ஒவியம் ஒன்றை கமலுக்கு ரஜினி பரிசாக தந்துள்ளார். அதில் கலைத்தாய் கமலை மட்டும் சுமப்பது போலவும், ரஜினி, மம்முட்டி போன்றவர்கள் கலைத்தாய் அருகே ஓடி வருவது போலவும் ஒவியத்தில் உள்ளது. இந்திய திரையுலகில் நட்பின் சிகரமாக இருக்கும் ரஜினி-கமலுக்கு இந்த ஒவியம் மேலும் மெருகூட்டுகிறது
Labels: cinema news
0 comments:
Post a Comment