
அஜ்மல், சுனைனா ஜோடியாக நடிக்கும் படம் கதிர்வேல். வி.செந்தில் குமார் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் இயக்குகிறார். இப்படத்துக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாடல் காட்சியொன்று நள்ளிரவில் படமாக்கப்பட்டது. தமிழ்நாட்டு குதிர என்னை அடக்க யாரு எதிர என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை மாடல் அழகி தஷ்கவுசிக் நடனம் ஆடினார். அவருடன் 500 துணை நடிகர், 40 நடன கலைஞர்களும் ஆடினார்கள். படப்பிடிப்பை காண அங்கு கூட்டம் கூடியது. ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் திடீரென துணை நடிகைகள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். நிலைமை மோசமானதை உணர்ந்த இயக்குனர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை தடியடி நடத்தி விரட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment