Wednesday, February 24, 2010


கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தன்னை மிரட்டி பல விழாவிற்கு வரவழைப்பதாக அஜித்குமார் தெரிவித்தார். இதனையடுத்து, அஜித்திற்கு சினிமா சார்ந்து உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், திரையுலகில் சமரசம் காண அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இன்று பிலிம்சேம்பரில் சமரசக் கூட்டம் நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன். உண்மையற்ற பேச்சுக்காக அஜித் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகளின் கூட்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அஜித்துக்கு ஆதரவு அளித்ததற்காக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஜித் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது. அதன் அடிப்படையில் ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் அஜித் பிரச்சினை குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment