main |
sidebar

நடிகை சோனியா அகர்வால் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட சிலபடங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக இருந்து வந்த சோனியா - செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆன்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது செல்வராகவனை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வரும் சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் உலவ விட்டார். சோனியாவின் இந்த வாய்ப்பு வேட்டையில் சிக்கியிருக்கிறது ஒரு மலையாள பட வாய்ப்பு. ஆமாங்க! மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க சோனியா அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் நாயகனாக சுரேஷ்கோபி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.எஸ்.சுரேஷ் பாபு இயக்குகிறார்.
0 comments:
Post a Comment