
விளம்பரத்திற்காகத்தான் பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையில் வருகிறேன் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். திரையில் அவ்வளாக கவர்ச்சி காட்டாத நடிகை பத்மப்ரியா பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளிலேயே வலம் வருவார். அந்த விழாவுக்கு வரும் ஒட்டுமொத்த ஆண்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அவரின் கவர்ச்சி இருக்கும். இதுபற்றி அவரிடம் கேட்டால், கவர்ச்சி உடை அணிவது என்னோட கொள்கை. அதனால பொது நிகழ்ச்சிகளுக்கு அப்படி வர்றேன். தமிழ்ப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மலையாளப் படங்களில் கவர்ச்சியாக நடிச்சிருக்கேன். பெரும்பாலும் பட விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சி உடையில் வருவேன். அந்த பட பிரமோஷனுக்கு எனது கவர்ச்சி உடை பயன்படும் என்பதால் அப்படி கலந்து கொள்கிறேன். சில கம்பெனிகள் விளம்பரத்திற்காக குறிப்பிட்ட உடையை அணிந்து வர வேண்டும் என்று கூறுவதால் மறுக்காமல் அவ்வுடைகளை அணிந்து பங்கேற்கிறேன், என்கிறார்
Labels: cinema news
0 comments:
Post a Comment