
இந்தி நடிகை தீபிகா படுகோன், சல்மான் கானுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் மூலம் இந்தி திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியவர் தீபிகா. இப்போது சல்மான் கானுடன் இணைய விரும்புகிறாராம். தீபிகாவின் விருப்ப நடிகர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம் சல்மான். இதுகுறித்து தீபிகா கூறுகையில், சல்மானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். ஏற்கனவே இரு படத்தில் இருவரும் இணைவதாக இருந்தது. ஆனால் அது கை கூடவில்லை. அது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் எதிர்காலத்தில் இருவரும் இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தீபிகா. தற்போது பர்ஹான் அக்தருடன் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் நடித்துள்ளார் தீபிகா. இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான அக்ஷய் குமார், சைப் அலி கான் ஆகியோருடன் நடித்துள்ள அனுபவம் கொண்ட தீபிகா, அடுத்து அபிஷேக் பச்சன், இம்ரான் கான், நீல் நிதின் முகேஷ் ஆகியோருடனும் ஜோடி போட இருக்கிறார்.
Labels: bollywood
0 comments:
Post a Comment