தெலுங்கு பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவை போதை பொருட்கள் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் போதை பொருளை கடத்தி விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். வேறு சில நடிகர்களுக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். தருண் பழைய நடிகை ரோஜாரமணியின் மகன். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18, காதல் சுகமானது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலித்து கைவிட்டதாகவும், இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.
Labels: cinema news
0 comments:
Post a Comment