
நாளை கண்ணபிரான் படத்திற்கு பிரம்மாண்டமாக துவக்க விழா நடத்தப்போகிறார் அமீர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் திமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆவார். இந்த படத்தை இயக்குகிற அதே நேரத்தில் வேறு படங்களில் கதாநாயகனாக நடிக்கலாமே? இப்படி வந்த அழைப்புகளுக்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார் அமீர். இப்படி அவர் மறுத்த படங்களில் ஒன்று கிடா. இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிற படம் இது. பரத் நடித்த கூடல் நகர் படத்தின் இயக்குனர் இவர். ஆரம்பத்தில் அமீருக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருந்தாராம். ஆனால் கண்ணபிரான் துவக்கம், இன்னபிற இழுபறிகள் ஆகியவற்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் அமீர். இப்போது அமீருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்கப் போகிறவர் நாடோடிகள் பரணி. செவிடராக வந்து கலக்கியிருப்பாரே, அவரேதான்! முதலில் இந்த கதையில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட ஆண்ட்ரியா, அமீர் கதாநாயகன் என்பதால் சரி என்றார். இப்போது கதாநாயகனை மாற்றிவிட்ட நிலையில் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு அடுத்தடுத்த வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார் சீனு ராமசாமி
Labels: cinema news
0 comments:
Post a Comment