Sunday, February 21, 2010


தனிப்பட்ட பிரச்சினைக்கெல்லாம் ஜாதியை இழுப்பது ஃபேஷனாகிவிட்டது தற்போது. பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் விவேக் தஞ்சமடைந்தது தனது ஜாதி சங்கத்தை. இப்போது அஜித் பிரச்சினையில் ஜாக்குவார் தங்கமும் ஜாதியை சொல்லி மிரட்டி வருகிறார். தனது ஜாதியினருடன் சென்று அஜித் வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர் சொன்னதையடுத்து அஜித்தின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், அஜித் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக தெரிவித்தார். அஜித்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ரஜினி ஒரு கோமாளி அவர் சொல்வதையெல்லாம் யாரும் சீரியஸா எடுத்துக்கிறதில்லை என்றார். அஜித் பிரச்சினையில் ஜாக்குவார் தங்கம் அஜித்தையும், ரஜினியையும் தாக்கிப் பேசினார். அவரது பேச்சை இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment