
நஞ்சுபுரம் என்ற படத்தில் ராகவ் ஜோடியாக நடித்திருக்கிறார் மோனிகா. பாம்புகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சார்லஸ் இயக்கி உள்ளார். படத்தில் பாம்புடன் நடித்த அனுபவம் பற்றி கதை கதையாக சொல்கிறார் மோனிகா. பாம்பு என்றால் ரொம்பவே பயம். கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குற பாம்பையே தள்ளி நின்னுதான் பார்ப்பேன். நஞ்சுபுரத்துல பாம்போடு நடிக்க வேண்டி வந்துச்சு. ஆரம்பத்துல பயந்து, பயந்து நடிச்சேன். அப்புறம் அதை தொட்டு தடவி பிரெண்டாக்கிட்டேன். செல்ல பெயர்கூட வச்சேன் என பாம்பு புராணம் பாடுகிறார் மோனிகா. படத்தின் நாயகன் ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்த ராகவ், அதற்கு பிறகு இந்த படத்தில்தான் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கிறார் ராகவ். கிராமத்து கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம். இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நூற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம் என்றார் இயக்குனர் சார்லஸ்
Labels: cinema news
0 comments:
Post a Comment