Wednesday, February 17, 2010


இரண்டு கதாநாயகன் கதையுள்ள படங்கள் அதிகமாக வரவேண்டும் என்கிறார் ஆர்யா. இதுபற்றி அவர் கூறியது: நான் கடவுள் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன். நான் கடவுள் என் திரையுலக வாழ்வில் மைல்கல். அதுபோல் அவன் இவன் படமும் எனது இன்னொரு பரிமாணத்தை காட்டும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டு கதாநாயகன் படங்களில் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அறிந்தும் அறியாமலும் தொடங்கி பட்டியல் என தொடர்ச்சியாக இரண்டு கதாநாயகன் கதைகளில்தான் நடித்து வருகிறேன். இரு நாயகர்களுடன் நடிக்கும்போது சக நடிகருடன் நடிப்பு போட்டி ஏற்படுகிறது. இதனால் நன்றாக நடிக்க வேண்டும் என்ற அதிகமாக யோசிக்க வைக்கிறது. இரண்டு கதாநாயகன்கள் கதைக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன். இதுபோல் நிறைய படங்கள் வரவேண்டும். மதராசப் பட்டணம் படம் முடிந்துவிட்டது. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை எப்படி இருந்தது என்பதை இப்படம் காட்டும். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமையும். தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று கூறினார்.

0 comments:

Post a Comment